திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்
திருச்செந்தூர்:
முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட கோயில்களில் இன்று சூரசம்ஹாரம்நடைபெறுகிறது.
முருகன் வீரமகேந்திரபுரி என்றழைக்கப்பட்ட திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தார். முடிவில் மனம்திருந்திய சூரபத்மனை சேவலும் மயிலுமாக ஆட்கொண்டு வாகனமாக்கி கொண்டார்.சூரன் வதம் நடந்து உதிரம் சிந்தியதால் மண் சிவந்த இவ்வூர் திருச்செந்தூர் எனும் பெயர் பெற்றது.
எனவே மற்ற கோயில்களில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை விட திருச்செந்தூரில் நடைபெறும் விழாமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்துகூடுவது வழக்கம்.
சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய பின் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெரிய கோயில் என்றுபக்தர்களால் அழைக்கப்படும் சிவக்கொழுத்தீஸ்வரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது அசூர படைகளுடன்வீதிவுலா சென்று கடற்கரையை அடையும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சூரனை வதம் செய்ய கடற்கரைக்குஎழுந்தருளுகிறார். இங்கு பல உருவங்களுக்கு மாறும் சூரனை ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்திறார்.
இதேபோல் பழனி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களிலும் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
பக்தர்கள் திருச்செந்தூரில் குவியத் தொடங்கியுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications