For Daily Alerts
Just In
விபத்திலிருந்து தப்பிய தூத்துக்குடி ரெயில்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் ரெயில்வே ஊழியரால் கண்டுபிடிக்கப்பட்டதால் தூத்துக்குடிரெயில் விபத்திலிருந்து தப்பியது.
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை ரெயில் நிலையத்திலிருந்து கொடைரோடு வரை ரெயில்வே கீமேன் ஜோதிமுருகன் என்பவர் தண்டவாளத்தை கண்காணித்த படி சென்றார்.அப்போது முருகம்பட்டி என்ற இடத்தில் கணவாயின் மையப்பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததைகண்டு பிடித்த முருகன் அந்த வழியாக மதுரை நோக்கி வந்த சரக்கு ரெயிலை சிவப்பு கொடியசைத்து நிறுத்தினார்.
இதனால் பெங்களூரிலிருந்து தூத்துக்குடி வந்த ரெயிலும் அம்பாத்துறையிலேயே நிறுத்தப்பட்டது.
பிறகு ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் விரைந்து சென்று 3 மணி நேரம் விரிசல் ஏற்பட்டதண்டவாளத்தை பழுது பார்த்து சரி செய்தனர்.
அதன் பிறகு சரக்கு ரெயிலும், தூத்துக்குடி ரெயிலும் புறப்பட்டு சென்றன. இதனால் நடக்கயிருந்த பெரும் ரெயில்விபத்து தவிர்க்கப்பட்டது.
Comments
Story first published: Monday, November 7, 2005, 5:30 [IST]