விஷம் வைத்து 15 மயில்கள் கொலை!
Subscribe to Oneindia Tamil
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 15 மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன.
மயில் நமது நாட்டின் தேசியப் பறவை. மான்களை வேட்டையாடுவது எப்படி பெரும் குற்றமோ,அதேபோலத்தான் மயில்களைக் கொல்வதும் குற்றமாகும்.தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட சுவர்னகிரி, வீரன் சுந்தரலிங்கம் காலனி, வடக்குஆவாராங்காடு, வெள்ளாரம் உள்ளிட்ட பல கிராமங்களில் 2000க்கும் மேற்பட்ட மயில்கள் உலவித் திரிகின்றன.
இந்த மயில்கள் சுற்றுக் கிராமங்களில் உள்ள வயல்களில் விளையும் தக்காளி, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்திவிடுகின்றன.
இந் நிலையில் சில விவசாயிகள் குரூர புத்தியுடன் செயல்பட்டு, தானியங்களுடன் விஷத்தைக் கலந்துவைத்துள்ளனர்.
இந்த விஷ தானியத்தை சாப்பிட்ட 15 மயில்கள் இறந்துள்ளன. கடந்த இரு வாரங்களில் மட்டும் இத்தனைமயில்கள் பலியாகியுள்ளன.
இதுகுறித்து இன்னொரு கிராமத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications