சென்னையில் இன்னொரு ஆதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் வெளிநாட்டுக் கடன் வாங்கித் தருவதாக கூறி பஞ்சாப்பைச் சேர்ந்த நபரை ஏமாற்றியதாக ஒருவரை போலீஸார்கைது செய்துள்ளனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் கோடிக்கணக்கில் சுருட்டிய சென்னைவியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

இதே பாணியில் பணத்தை சுருட்டி வந்த கொடைக்கானலைச் சேர்ந்த ஐடியல் சுப்ரமணியம் போலீஸாரிடம் சிக்கினார்.

இந்த நிலையில் ஆதி கேசவன் பாணியில் பண மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் இன்று கைதுசெய்தனர்.

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அந்த நபரின் பெயர் பத்மநாபன். பஞ்சாப்பைச் சேர்ந்த ஒருவருக்கு வெளிநாடு வாழ்இந்தியர்களிடமிருந்து ரூ. 5 கோடி கடன் வாங்கி த் தருவதாக கூறி கமிஷன் பணத்தை வாங்கியுள்ளார்.

ஆனால் சொன்னபடி கடன் வாங்கித் தரவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த பஞ்சாப்காரர், சென்னை மாநகர காவல்துறைஆணையர் நடராஜிடம் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து பத்மநாபனை போலீஸார் இன்று கைது செய்தனர். ஆதிகேசவன் பாணியில் இவரும் கோடிக்கணக்கில் மோசடிசெய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதால் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

பத்மநாபனின் கூட்டாளிகளாக கருதப்படும் 4 பேரையும் போலீஸார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+