For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம்: பயங்கர வெடி விபத்து- வீடு தரைமட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலத்தில் தங்கியுள்ள கென்ய நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவரின் வீட்டில் இன்று அதிகாலை பயங்கர குண்டு வெடித்தது. இதில் வீடேதரைமட்டமாகிவிட்டது.

சேலம்-ஏற்காடு சாலையில் கொண்டப்ப நாயக்கன்பட்டி என்ற இடத்தில் முயல் நகர் பகுதியில் டேவிட் ராஜ்குமார் என்பவரின் வீடுஉள்ளது. கோவையில் பள்ளி ஆசிரியராக உள்ள இவரது வீட்டில் கென்யாவைச் சேர்ந்த கிளிபெட் பேடி, பெபி என்ற இருவர் வாடகைக்குக்குடியிருந்தனர். இருவரும் அண்ணன்-தங்கை ஆவர்.

இவர்கள் சேலம் விநாயகா பார்மஸி கல்லூரியில் படித்து வருகின்றனர். இதில் கிளிபெட் கடந்த வாரம் கென்யா திரும்பிவிட்டார். பெபிமட்டும் வீட்டில் இருந்தார். இந் நிலையில் இன்று அதிகாலை இந்த வீட்டில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டது.

இதில் அந்த வீடே தரைமட்டமாகிவிட்டது. அருகில் இருந்த சில குடிசை வீடுகளும் சிதறிவிட்டன.

முதலில் கேஸ் சிலிண்டெர் வெடித்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், வீட்டில் இருந்த சிலிண்டெர் அப்படியே உள்ளது. இதனால்வெடித்தது சக்தி வாய்ந்த வெடிகுண்டாகவே இருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

எப்படியோ உயிர் தப்பிவிட்ட பெபியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பார்மஸி படிக்கும் இவர் வெடிக்கும் தன்மைகொண்ட ரசாயனம் எதையும் வீட்டில் வைத்திருந்தாரா அல்லது வெடிகுண்டே வைத்திருந்தாரா என்று விசாரணை நடக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X