ஜப்பான்: கடலுக்கடியில் மாபெரும் பூகம்பம்- சிறிய சுனாமி தாக்குதல்
டோக்கியோ:
ஜப்பானை இன்று மிக பயங்கரமான பூகம்பம் தாக்கியது. இதனால் சிறிய சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதையடுத்து கடலோரப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பசிபிக் கடலுக்கு அடியில் இன்று காலை அந் நாட்டு நேரப்படி 6.39 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில்6.9 என்ற அளவுக்கு இந்த பூகம்பம் பதிவாகியுள்ளது.இதைத் தொடர்ந்து ஜப்பானின் வடக்குக் கடலோரப் பகுதிகளை சிறிய சுனாமி அலைகள் தாக்கின. இதையடுத்து அந்தப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் ஹோன்சு தீவில் இருந்து 350 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பசிபிக்கடலில் 50 செ.மீ. (சுமார் ஒன்றரை அடி) உயரமான சுனாமி அலைகள் ஏற்பட்டு ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதிகளைத்தாக்கின.
அதே நேரத்தில் ஹோன்சு தீவில் மிக உயரமான அலைகள் தாக்கின. இதுவரை உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டதாக தகவல்ஏதும் இல்லை.
இதற்கு மேல் சுனாமி தாக்க வாய்ப்பில்லை என்பதால் வெளியேற்றப்பட்ட மக்கள் ஊர்களுக்குத் திரும்பஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications