ஜெயலட்சுமிக்கு நெஞ்சு வலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவகாசி ஜெயலட்சுமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.டிஎஸ்பி ராஜசேகரன் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதான வழக்கில் ஜெயலட்சுமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனைவிதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறையிலிருந்த ஜெயலட்சுமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை போலீசார் திருச்சிஅரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். பிறகு அவரது உடல் நலம் தேர்ச்சி பெற்றது.
பின்னர், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications