20 வயதில் அடி வைக்கும் சானியா
ஹைதராபாத்:
கிரிக்கெட் வீரர் சச்சினுடன் ஒரே மேடையில் விழாவில் பங்கேற்றது எனது பிறந்த நாளில் எனக்கு கிடைத்த இன்பஅதிர்ச்சி என்று டென்னிஸ் புயல் சானியா கூறியுள்ளார்.
ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் வரும் 27ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடக்கிறது.
இதற்கான அறிமுக விழா ஹைதராபாத்தில் நடந்தது. நமது மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், டென்னிஸ் வீராங்கனைசானியா மிர்சா, பாட்மின்டன் நட்சத்திரம் கோபிசந்த் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இன்று 20வது பிறந்த நாள் கொண்டாடும் சானியா, சச்சினோடு ஒரே மேடையில் பங்கேற்றதை மிகப் பெரும்கவுரவமாக கருதினார். இது தனக்கு கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசு. இதை காட்டிலும் சிறந்த பரிசு வேறுஎதுவும் இருக்க முடியாது, என மகிழ்ச்சி பொங்க கூறினார் சானியா.
தற்போது இளம்புயல் சானியா டென்னிஸ் உலக தர வரிசையில் 31ம் இடத்தில் இருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வீரர்களை பார்ப்பதற்கு கூட்டம் திரள்வதைப் போல சானியா மிர்சாவுக்கு கூட்டம் கூடுகிறது. தனதுபிறந்த நாளை சானியா தனது குடும்பத்தினருடன் மிகவும் எளிமையாக கொண்டாடுகிறார்.