இந்தியாவுக்கு 2 அமெரிக்க உளவு விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
![]() |
இந்தியாவிற்கு இரு பி-3சி ஓரியன் வகை கடல் பகுதி உளவு விமானங்களை வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது. இத் தகவலைஅமெரிக்க நாடாளுமன்றத்திடம் அந் நாட்டு பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்துள்ளது.
இப்போது இந்தியாவின் வசம் உள்ள ரஷ்ய உளவு விமானங்களான ஐ.எல்-38 விமானங்களின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது.இதையடுத்து 133 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய உளவு விமானங்களை அமெரிக்காவிடம் இந்தியா குத்தகைக்குவாங்குகிறது.
நீர்மூழ்கிகளை அடையாளம் காண்பது, தாக்குவது உள்பட கடல்சார் உளவுப் பணிக்கு இந்த விமானங்கள் உதவும்.
![]() |
இந்த விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதா வேண்டாமா என்பது குறித்து அமெரிக்க காங்கிரஸ் ஒரு மாதத்தில்முடிவெடுக்கும்.
இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த ஜூலையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதால் இந்த விமானங்கள்இந்தியாவுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருக்காது.














Click it and Unblock the Notifications