For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூரில் குஷ்புவை பாதுகாத்த அதிமுகவினர்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த குஷ்பு நீதிபதி இல்லாததால் அங்கேயே ஒரு நாள் தங்க வேண்டிய நிலை வந்தபோதுஅவருக்கு உதவி செய்தது அதிமுகவினர் தானாம்.

நீதிபதி இல்லாததால் மறுநாள் காலையில் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட குஷ்பு, அந்தஊரில் இரவில் தங்க அஞ்சினாராம். தனக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களால் பிரச்சனை வருமே என பயந்தாராம்.

சேலம் அல்லது மேட்டூரில் ஹோட்டலில் தங்கினால் தனக்கு பாதுகாப்பு இருக்குமா என பயந்த குஷ்புவுக்கு அதிமுவைச் சேர்ந்தவழக்கறிஞர் செளர்ந்தர் தான் வேண்டிய ஏற்பாடுகள் செய்து தங்க வைத்தார்.

இந்த செளந்தர் வேறு யாருமல்ல, கடந்த 1996ம் ஆண்டில் அதிமுக சார்பில் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர்தான். செளந்தரும் அதிமுகவினரும் தான் குஷ்புவுக்கு பாதுகாப்பு தந்தார்கள்.

நீதிமன்ற வாரண்ட் இருந்தபோதும் குஷ்புவை கைது செய்யாமல் காத்தது மேட்டூர் போலீஸ் என்பது நினைவுகூறத்தக்கது.

அதிமுக மேலிடத்தின் அனுமதியில்லாமல் குஷ்புவுக்கு அக் கட்சியினர் மேட்டூரில் பாதுகாப்புத் தந்திருக்க வாய்ப்பில்லைஎன்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X