நிரம்பியது மேட்டூர்: காவிரியில் வெள்ள அபாயம்
சேலம்:
![]() |
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பிவழிகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 120 அடியான அதன் முழு கொள்ளவை எட்டியது. தற்போதுஅணையின் நீர்மட்டம் 120.2 அடியாக உள்ளது.
![]() |
ஆத்தூர்-கரியகோவில் அணையின் நீர்மட்டம் 50.52 அடியாகவும் , ஆணைமடுவு அணையின் நீர்மட்டம் 65.28 அடியாகவும்உள்ளது. இதனால் இந்த அணைகளுக்கு வந்து கொண்டு இருக்கும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
![]() |
இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வெள்ளம் பாதித்த 12 மாவட்டங்களில் தேவையான நடவடிக்கைகளைமேற்கொள்ளவும் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை செய்ய வழிகாட்டுதலை வழங்குவதற்காவும் முதலமைச்சர் ஜெயலலிதாதமிழக அமைச்சர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி பாதித்த மாவட்டங்கள் அங்கு சென்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:
கடலூர்-சி.பி. சண்முகம், நாகப்பட்டினம்-பொள்ளாச்சி ஜெயராமன், தஞ்சாவூர்-வைத்திலிங்கம், விழுப்புரம்-தளவாய் சுந்தரம்,திருச்சி-அண்ணாவி, மதுரை-ஓ.பன்னீர் செல்வம், சிவகங்கை-நைனார் நாகேந்திரன், புதுக்கோட்டை-ராதகிருஷ்ணன்,திருவாரூர்-ராமச்சந்திரன், சேலம்-விஜயலட்சுமி பழனிச்சாமி, திண்டுக்கல்-ஆர்.விசுவநாதன், பெரம்பலூர்-கே.பி.அன்பழகன்.
மேலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் இந்த மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகளை செய்ய அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.















Click it and Unblock the Notifications