ஆஸதிரேலியா: இந்திய பெண் டாக்டர் மீது கொலை வழக்கு
சிட்னி:
சிசு முழுமையான வளர்ந்த நிலையில் பெண்ணுக்கு அபார்ஷன் செய்த இந்திய பெண் டாக்டர் மீது ஆஸ்திரேலியாவில் கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிட்னியில் வசிக்கும் சுமன் சூத் என்ற அந்த டாக்டரை, 23 வார கர்ப்பிணியான 20 வயது பெண் சந்தித்து அபார்ஷன் செய்யுமாறுகோரினார். ஆனால், கர்ப்பத்தில் சிசு நன்றாக வளர்ந்துவிட்ட நிலையில் அவருக்கு அபார்ஷன் செய்வதை சுமன் தவிர்த்திருக்கவேண்டும்.
ஆனால், அவருக்கு அபார்ஷன் மாத்திரைகள் தந்தார். அவற்றை உண்ட அந்தப் பெண்ணுக்கு மறு நாள் காலை குறைப் பிரசவம்நடந்தது. டாய்லெட்டில் அவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், பாதி வளர்ந்திருந்த அந்த சிசு 5 மணி நேரத்தில்உயிரிழந்தது.
இதையடுத்து 56 வயதான சுமன் சூத் மீது அவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு வரும் ஜனவரியில் விசாரணைக்கு வருகிறது. இதை கொலை என்று நீதிமன்றம் அறிவித்தால் சுமன் சூதுக்கு 35வருட சிறை தண்டனை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications