புழல் ஏரி திறப்பு: செங்குன்றத்தை நீர் சூழ்ந்தது
சென்னை:
சென்னையில் புழல் ஏரி நிரம்பிவிட்டதையடுத்து அது இன்று திறக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து வெளியேறிய நீர்செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்தது.
காலை ஏரி திறக்கப்பட்டவுடன் தண்ணீர் புயலாகக் கிளம்பியது. கால்வாய்களையும் மீறிக் கொண்டு இந்த நீர் செங்குன்றம்,திருநீலகண்டநகர், காஞ்சிஅம்மன் நகர், மாரியம்மாள் நகர், மாதா நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்குள் புகுந்தது.
இந்தப் பகுதி மக்கள் நேற்றே எச்சரிக்கப்பட்டிருந்தனர். இதனால் பெரும்பாலானவர்கள் குடும்பங்களுடன் பொருட்களுடன்மாடிகளில் குடியேறிவிட்டனர். மேலும் பலர் அந்தப் பகுதிகளை காலி செய்துவிட்டு அகன்றுவிட்டனர்.
ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால், ஏரியில் இருந்து செல்லும் நீரில் அளவு விரைவில் இரண்டு மடங்காகப்படவுள்ளது.இதனால் மேலும் பல பகுதிகளையும் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏழு ஆண்டுகளுக்குப் பின் ஏரி நிரம்பி திறக்கப்பட்டபோது அமைச்சர் வளர்மதி, கலெக்டர் பங்கஜ்குமார் பன்சால் உள்ளிட்டோர்அதை நேரில் பார்வையிட்டனர். முன்னதாக ஏரி நீருக்கு அமைச்சரும் அதிகாரிகளும் பூத் தூவி பூஜையும் செய்தனர்.
இந்த நீர் தண்டல், புழல், மஞ்சம்பாக்கம், மணலி, திருவொற்றியூர், கத்திவாக்காம், எண்ணூர் வழியாக சுமார் 13 கிமீ பயணித்துவங்கக் கடலில் கலக்கும். வழியில் உள்ள இந்தப் பகுதிகளில் நீர் புகவும் வாய்ப்புள்ளதால் அப் பகுதியினர்எச்சரிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications