சுனாமி ஊழல் விசாரிக்க ஜெ தயாரா?-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுனாமி நிவாரண நிதியாக மத்திய அரசு கொடுத்த பல நூறு கோடி ரூபாய், மக்களை சென்றடையாமல் அதிமுகவினரால்சுருட்டப்பட்டு விட்டது. அதை விசாரணை கமிஷன் வைத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

அமராவதி பாலம் கட்டியதில் திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது. அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப் போகிறேன் என்றுதனது வெள்ள நிவாரணச் சுற்றுப் பயணத்தின் போது கரூரில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இது குறித்து கருணாநிதி கூறுகையில், கடந்த ஆண்டு சுனாமி நிவாரண நிதியாக மத்திய அரசு தந்த பல நூறு கோடி ரூபாயைபாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தாமல் அதிமுகவினர் சுருட்டிவிட்டனர். அந்தப் பணம் என்ன ஆயிற்று என்பதற்கு விடைதேவை. இதையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.

இதற்கிடையே கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசன், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர்கூறுகையில்,

கரூர் அமராவதி பாலம் பிஓடி என்ற திட்டத்தின் மூலம் கட்டப்பட்டது. அந்த பாலம் இன்னும் பழுதடையாமல் நன்றாகவேஉள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலத்திற்கு செல்லும் சாலைகள் தான் பழுதடைந்துள்ளது.

இந்தப் பாலம் காண்ராக்டர் கட்டுப்பாட்டில் தான் இன்னமும் இருக்கிறது. மாநில அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை. பிஓடிகாண்ராக்ட் ஒப்பந்தத்தின்படி 14 வருடங்கள் காண்ராக்டர் கட்டுப்பாட்டில் தான் இந்த பாலம் இருக்கும்.

இந்த பாலம் கட்டுவதற்கு அனுமதி அளித்ததை தவிர, பாலம் கட்டுமானப் பணிகளில் திமுகவிற்கு எந்த பொறுப்பும் இல்லைஎன்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+