இலங்கைக்கு புதிய ராணுவ தளபதி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
சுனாமி மீட்பு மற்றும் நிவாரணத்துக்கான ஐநாவின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்டன் இலங்கை வந்தார்.
நேற்று அந் நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுடன் சுனாமி நிவாரண நடவடிக்கைகள் குறித்து கிளின்டன் பேச்சுவார்த்தைநடத்தினார். மேலும் புலிகளுடன் அமைதி முயற்சிகளைத் தொடருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.முன்னதாக மாஜி அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும் அவர் சந்தித்தார். அப்போது விடுதலைப் புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இலங்கைக்கு புதிய ராணுவ தளபதி:
இலங்கையின் புதிய ராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சரத் போன்செகா நியமிக்கப்படவுள்ளார். அதிபர் ராஜபக்ஷேவின்உத்தரவின் பேரில் அவர் 18வது ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டு, விரைவில் பதவியேற்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications