டிசம்பர் 6: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாபர் மசூதி இடிப்பு தினம் மற்றும் கோவை போலீஸ் ஏட்டு செல்வராஜ் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த போலீஸ் ஏட்டு செல்வராஜ் கொலை செய்யப்பட்ட நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மேலும்வரும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு நாளாகும். அதனால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்கதமிழகம் உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தமிழ்நாடுசிறப்பு போலீஸ் படை பிரிவில் இருந்து கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் பஸ் நிலையங்கள், கோவில்கள், விமான நிலையங்கள், மக்கள் கூடும் பொது இடங்களிலும் கண்காணிப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முக்கிய நகர்களில் லாட்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 130 பேர் வரைசந்தேகத்திற்கிடமான வகையில் திரிந்ததாக பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+