வெள்ளத்தில் போன படிப்பு: ஜெயலலிதா உதவி
சென்னை:
![]() |
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் பெய்த கன மழையால் தமிழகம் வரலாறு காணாத பேரிப்பை சந்தித்துவிட்டது. குறுகிய காலத்துக்குள் 3 முறை பெய்தகன மழையால் தமிழகத்தின் 22 மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வெள்ளம், கன மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் பாடப் புத்தகங்களும்,நோட்டுப் புத்தகங்களும் கூட நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. மேலும் பல இடங்களில் நீரில் நனைந்து போய்பயன்படுத்த இயலாத அளவுக்கு அவை சிதைந்துவிட்டன.
அரையாண்டுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவ, மாணவிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டது கவலை தருகிறது. அவர்களதுகல்வி தடங்கல் இல்லாமல் தொடர்வதற்கு வசதியாக தேவையான மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்க முடிவு செய்துள்ளோம்.இதன்படி 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளில் நோட்டு, பாடப் புத்தகத்தை இழந்தவர்களுக்குஇலவசமாக அவை வழங்கப்படும்.
சுமார் 3.6 லட்சம் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ. 1.35 கோடி செலவில்இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications