குஷ்பு: நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்
மேட்டூர்:
![]() |
தமிழகப் பெண்களின் கற்பு குறித்து இழிவாகப் பேசிய குஷ்புவுக்கு எதிராக 20க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் வழக்குகள்போடப்பட்டுள்ளன. இதில் மேட்டூர் நீதிமன்றம் குஷ்பு நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
ஆனால், உத்தரவை குஷ்பு மதிக்கவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார் நீதிபதி ஸ்ரீதரன்.இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் குஷ்பு ஆஜராகி ஜாமீன் பெற்றார். இதற்காக மேட்டூர் வந்த குஷ்புவுக்கு எதிராக துடைப்பம்,செருப்பு போராட்டம் நடந்தது. சில செருப்புகளும் அவர் மீது வீசப்பட்டன.
இந் நிலையில் குஷ்புவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி ஸ்ரீதரனின் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.
அதில், குஷ்பு மீது வீண் பழியின் பேரில் பொய் புகாரைப் பெற்றுக் கொண்டு அவரை இழிவுபடுத்தும் வகையில் பிடிவாரண்ட்பிறப்பித்து வேண்டுமென்றே பத்திரிக்கைகளில் செய்திகளை பிரசுரம் செய்ய வைத்ததற்காக நாங்கள் தண்டனை கொடுக்கதீர்மானித்துள்ளோம்.
எனவே இன்று உங்கள் நீதிமன்றம், காவேரி கிராஸ் பாலம் ஆகிய இடங்களை சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்துதகர்க்கவுள்ளோம். முடிந்தால் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், வாழ்வா அல்லது சாவா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை போலீசாரிடம் நீதிபதி ஒப்படைத்துள்ளார்.கடிதத்தை எழுதியவன் தனது முகவரியாக: இர்பான் கலெக்சன், மாநகராட்சிப் பள்ளி அருகே, அமைந்தகரை, சென்னை-29 என்றுபெயர்- முகவரியைக் குறிப்பிட்டுள்ளார். கடிதம் சென்னை மேற்கு மாம்பலம் தபால் நிலையத்தில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து மேட்டூர் மாதையன் குட்டையில் உள்ள நீதிபதி ஸ்ரீதரனின் வீடு, நீதிமன்றம், காவேரி பாலம்ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மேலும் கடிதத்தை அனுப்பியவனை மடக்கும் முயற்சிகளில் க்யூ பிராஞ்ச் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications