திருத்தணி ஏரியில் உடைப்பு: சென்னை-திருப்பதி போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
திருத்தணி ஏரியின் கரையை சில விஷமிகள் உடைத்ததால் திருவள்ளூரில் ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் தண்ணீரில்மூழ்கியுள்ளன.
இதனால் பைபாஸ் சாலை, ஆசிரியர் குடியிருப்பு, திருப்பதி சாலை, ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், கடைகள்தண்ணீரில் மூழ்கின. மேலும் சென்னை- திருப்பதி சாலையும் நீரில் மூழ்கிவிட்டது.கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக ஏரியில் 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. ஏரியை ஒட்டிய பகுதியில்ஏராளமானோர் வீடுகளை கட்டி வசிக்கின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் ஏரி நிரம்பி அந்த வீடுகள் மூழ்கும் என்பதால்,ஏரிக்கரையை சிலர் உடைத்துவிட்டுள்ளனர்.
30 அடி அகலத்துக்கு ஏரிக் கரை உடைக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் திருத்தணி பைபாஸ்சாலையில் இடுப்பளவு தண்ணீர் ஓடுகிறது.
இதனால் சென்னை-திருப்பதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications