கொள்ளிடம் இரும்புப் பாலம் உடைந்தது

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சியில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்ட இரும்புப் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ஓடும் கொள்ளிடம் ஆற்றின் மீது, சமயபுரம் அருகே டோல்கேட் என்ற இடத்தில் கடந்த 1928ம் ஆண்டு ஆங்கிலேயர்ஆட்சிக்காலத்தில் இரும்புப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியாக துறையூர், அரியலூர், சேலம் உள்ளிட்ட பலஊர்களுக்கு போக்குவரத்து நடந்து வருகிறது.

திருச்சியின் முக்கிய போக்குவரத்து பாலமாகவும் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் விளங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சிலவாரங்களாக தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரின் காரணமாக இரும்புத் தூண்களில் ஒன்றுதுருப்பிடித்து உதிரத் தொடங்கியது.

அதிகாரிகள் இதை சரிவர கவனிக்காத காரணத்தால் துருப்பிடித்து உதிர்ந்த தூண் இன்று முழுமையாக விழுந்தது. இதனால்சுமார் 3 அடி அளவுக்கு பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் பாலத்தின் வழியாக கனரக வாகனப்போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

சேலம், அரியலூர், துறையூர் செல்ல வேண்டிய வாகனங்கள், நகரப் பேருந்துகள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள் மட்டுமே பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ளஉடைப்பை அதிகாரிகள் விரைவில் சரி செய்யாவிட்டால் பாலம் இரு துண்டாக உடைந்து விழும் ஆபத்து உள்ளதாகபொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் பாலத்தின்கதி அதோ கதிதான் என திருச்சி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+