நிவாரணம்: மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

யானைப் பசிக்கு சோளப் பொறி போல, தமிழக வெள்ள நிவாரண நிதியாக வெறும் ரூ. 500 கோடியை மட்டும் மத்திய அரசுஒதுக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், தமிழக மழை நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு 13,000கோடி ரூபாயைக் கோரியுள்ளது. ஆனால் மத்திய அரசோ 500 கோடி ரூபாயை மட்டுமே இப்போதைக்கு ஒதுக்கியுள்ளது.

இது கண்டனத்துக்குரியது. யானைப் பசிக்கு சோளப் பொறி போல இது உள்ளது. தமிழக அரசு கோரியுள்ள நிவாரண நிதியைமத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசை கண்டித்தும், நிவாரண நிதியை வழங்கக் கோரியும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.

தமிழக மழை, வெள்ளப் பாதிப்புகளை தேசியப் பேரழிவாக மத்திய அரசு கருத வேண்டும். மழை, வெள்ள நவாரண நிதிதொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை கைவிட்டு தமிழக அரசுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்றார் வரதராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+