For Daily Alerts
Just In
மேட்டூர் அணை 5வது முறையாக நிரம்பியது: காவிரியில் வெள்ள அபாயம்
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை இந்த ஆண்டில் 5வது முறையாக நிரம்பியது.
மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்துவிநாடிக்கு 14, 207 கன அடியாக உள்ளது.
மேலும், அணையில் இருந்து 13, 964 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அணையில் நீர்மட்டம்120.2 அடியாக உள்ளது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் மேட்டூர் அணை திறக்கப்படும். அப்படி அணை திறக்கப்பட்டால்காவிரி கரையோர பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படலாம்.
Comments
Story first published: Saturday, May 7, 2005, 5:30 [IST]