போலி எப்.ஐ.ஆர்: சிபிஐ விசாரணை கோரும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
சென்னை:
போலி எப்.ஐ.ஆர் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் சுமார் ரூ. 300 கோடி அளவுக்கு பணம் முறைகேடுசெய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
போலி எப்.ஐ. ஆர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தான் இது அதிக அளவில்புழக்கத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில் ராமநாதபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்ட காவல் நிலையங்களிலும்அதிக அளவில் போலி எப்.ஐ.ஆர் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் போலி எப்.ஐ.ஆர் விவகாரம் வெளிக் கிளம்பியதைத் தொடர்ந்து நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இன்சூரன்ஸ்ஆகிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் புலனாய்வுக் குழுவை அமைத்தன.
இந்தக் குழுவின் தலைவர் மாரியப்பன் விசாரணை குறித்துக் கூறுகையில், ஆயிரக்கணக்கான போலி எப்.ஐ.ஆர் மூலம்இன்சூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து ஆண்டுக்கு ரூ. 300 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
எங்களது ஆரம்பக் கட்ட விசாரணை மூலம் வெளியான தகவல் இது. இன்னும் விசாரணையைத்ை தீவிரப்படுத்தினால் மோசடிசெய்யப்பட்ட பணத்தின் உண்மையான மதிப்பு இதை விட அதிகமாக இருக்கும் என தெரிகிறது.
இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இவ்வாறு மோசடி செய்யப்பட்ட பணம் மக்கள் பணமாகும். எனவே இந்த விவகாரத்தை சிபிஐவிசாரணைக்கு விட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications