எம்ஜிஆர் பல்கலை. கட்டடங்கள் தப்புமா?
சென்னை:
சென்னை மதுரவாயலில் உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்குச் சொந்தமான எம்.ஜி.ஆர். நிகர் நிலைப்பல்கலைக்கழக கட்டடங்களை இடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர்சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சென்னை மதுரவாயலில் கூவம் நதிக் கரையில், எம்.ஜி.ஆர். நிகர் நிலைப் பல்கலைக்கழகம்உள்ளது. இதில் பல் மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி ஆகியவை உள்ளன.கூவம் ஆற்றை ஆக்கிரமித்து இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி சமீபத்தில் அதிகாரிகள் இந்தக் கட்டடங்களை இடிக்கபுல்டோசர்களுடன் வந்தனர்.
பல்கலைக்கழகச் சுற்றுச்சுவர், காவலர்கள் தங்கும் அறைகள் உள்ளிட்டவை இடித்து தள்ளப்பட்டன. கட்டடங்களையும் இடிக்கஅதிகாரிகள் புல்டோசர்களைத் தயார்படுத்திய நிலையில் உயர்நீதிமன்றத்தை அணுகிய பல்கலைக்கழக நிர்வாகம் இடிப்புக்குஇடைக்காலத் தடை வாங்கியது.
இந் நிலையில், தடையை நீக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமார் பன்சால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் சதாசிவம், சித்ரா வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரிக்கவுள்ளது.