சென்னையில் 1,440 ஏக்கரில் புதிய விமான நிலையம்
சென்னை:
சென்னையில் புதிய அதி நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான 1,440 ஏக்கர்நிலத்தை தமிழக அரசு, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வழங்கியது.
சென்னை நகரம் அதிவேக வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப நகர்என்ற பெயரை சென்னை பெற்று வருகிறது. பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் தங்களது பிரிவுகளை சென்னையில் அமைத்துவருகின்றன.இதுதவிர சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னையில்புதிதாக ஒரு சர்வதேச விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்குக் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், புதிய சர்வதேச விமானநிலையத்தை அமைக்க தேவைப்படும் நிலத்தை தமிழக அரசு இலவசமாக தந்தால், உடனடியாக புதிய விமான நிலையப்பணிகளைத் தொடங்கி விடுவோம் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நிலம் இலவசமாக தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 1,440 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிஇந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.
இந்த நிலம் தற்போது உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தின் வட பகுதியில் உள்ளது. இதை தன் வசம் எடுத்துக் கொள்ளவிமான நிலைய ஆணையமும் ஒப்புதல் அளித்து விட்டது.
இதைத் தொடர்ந்து விரைவில் புதிய விமான நிலையம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.