இராக்கில் குண்டு வெடிப்புடன் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

இராக்கில் சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்ட பின் அங்கு முதன் முறையாக இன்று தேர்தல் நடந்தது.

வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பு பாக்தாத்தில் உள்ள அரசு அலுவலகம் மற்றும் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடித்தது. ஆனால் இச் சம்பவத்தால் யாரும் உயிரிழக்கவில்லை.

அங்கு தொடர்ந்து அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க அமெரிக்க மற்றும் இராக் ராணுவம் மற்றும் போலீசார் பலத்தபாதுகாப்பில் ஈடுபட்டனர்.

இந்தத் தேர்தலில் 15.5 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இராக் நாடாளுமன்றத்தின் 275 இடங்களுக்கு 307 அரசியல் கட்சிகள் உள்பட 7,655 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஆட்சியைகைப்பற்றும் வாய்ப்பு ஷியா முஸ்லீம்களுக்கு அதிகமாக உள்ளதாக தெரிகிறது. இராக்கில் புதிய அமைச்சரவை ஜனவரி மாதம்கூடும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+