ஜெ.வுடன் அன்பழகன் திடீர் சந்திப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமைச் செயலகத்தில் திடீரென சந்தித்துப் பேசினார்.
எதிரும் புதிருமாக இருப்பவர்கள் திடீரென சந்தித்துக் கொண்டால் பரபரப்பு பற்றிக் கொள்வது சகஜமான ஒன்றுதான்.அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.அரசியல் அரங்கில் பரம வைரிகளாக விளங்கி வரும் அதிமுக மற்றும் திமுகவின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும்ஜெயலலிதாவும், அன்பழகனும் இன்று தலைமைச் செயலகத்தில் சந்த்தினர்.
முதல்வர் என்ற பொறுப்பில் ஜெயலலிதாவும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையில் அன்பழகனும் இந்த சந்திப்பில்கலந்து கொண்டனர்.
தகவல் பெறும் உரிமைக்கான சட்டம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை அமல்படுத்துவதற்காக மாநிலஅளவில் ஆணையங்கள் அமைக்கப்படும்.
தமிழகத்தில் இந்த ஆணையம் அமைப்பது குறித்தும், அதில் ஆணையர், இணை ஆணையர்களை நியமிப்பது தொடர்பானஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது. இந்த ஆலோசனையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில்அன்பழகன் கலந்து கொண்டார்.
முதல்வர் ஜெயலலிதாவின் அறையில் நடந்த இச் சந்திப்பின்போது நிதியமைச்சர் பொன்னையன், அதிகாரிகளும் உடன்இருந்தனர். ஆணையர்கள் நியமனம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவில் அன்பழகனும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் அன்பழகன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.