For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. விலக திமுக கூட்டணி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வெள்ள நிவாரண உதவிகள் பெறச் சென்று 42 பேர் பலியானதற்குப் பொறுப் பேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையிலானஅரசு பதவி விலக வேண்டும் என்று ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் கோரியுள்ளன.

42 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்கருணாநிதி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.

இதில் கருணாநிதி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஜி.கே.வாசன், ராமதாஸ், வைகோ, ரங்கராஜன், காதர் மொய்தீன், டி.ஆர்.பாலுஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உயிரிழந்த 42 பேரின் குடும்பங்களுக்கும் இரங்கல் மற்றும் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கருணாநிதிசெய்தியாளர்களிடம் பேசுகையில், போலீஸார் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளாத நிலையில்நிவாரணம் பெற வந்தவர்கள், நெரிசலில் சிக்கி இறந்தது வேதனையைத் தருகிறது.

உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்று ஏற்கனவே ஏராளமான புகார்கள் வந்துள்ளன.இந்த நிலையில் நிவாரணம் பெற வந்தவர்கள் உயிரை விட்டுள்ளது வேதனையாக உள்ளது.

பல பேர் உயிரிழந்த நிலையிலும், ஈவு, இரக்கமின்றி காவல் துறையினர் கூட்டத்தினர் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதுகண்டனத்துக்குரியது என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X