இ மெயில் மிரட்டல்: 5 பேரின் வீடுகளில் சோதனை
திருநெல்வேலி:
நாடாளுமன்றத்திற்கு இ மெயில் மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீஸ் பிடியில் சிக்கியுள்ள திருநெல்வேலி கல்லூரிப்பேராசிரியர் உள்ளிட்ட 5 பேரின் வீடுகளில் டெல்லி சிறப்புப் படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீஸ் பிடியில் 11 பேர் சிக்கியுள்ளனர். இவர்களைவிசாரிக்கும் பொறுப்பு தற்போது டெல்லியிலிருந்து வந்துள்ள சிறப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.டெல்லி சிறப்புப் படையினர் 11 பேரையும் இன்றும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் போலீஸ் பிடியில்சிக்கியுள்ள கல்லூரிப் பேராசிரியர் ஷேக் ஜிந்தா உள்ளிட்ட 5 பேரின் வீடுகளில் இன்று டெல்லிப் படையினர் திடீர் சோதனைநடத்தினர்.
இவர்களுக்கும், தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் படைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த சோதனைநடத்தப்பட்டது. சோதனையின் போது ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து போலீஸார் எதுவும் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து 11 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர்களில் 10 பேரை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணைநடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எப்போது கொண்டு போகப்படுவார்கள் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications