For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏசிஎஸ் பெங்களூரில் பதுங்கல்: தனிப்படை விரைவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஏ.சி. சண்முகத்தின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அவர் பெங்களூரில்பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரவாயலில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் தொடர்பாக மதுரவாயல்போலீசார் ஏ.சி. சண்முகம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதே போல் முன்னாள் மாணவர் தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டெபாசிட் தொகையை கேட்ட போது கல்லூரி நிர்வாகம்கொடுக்க மறுத்ததது தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த இரண்டு வழக்குகள் தொடர்பாக ஏ.சி.சண்முகம் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து ஏ.சி. சண்முகத்தை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் அன்பு மொழி தலைமையில்தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஏ.சி. சண்முகம் பெங்களூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாகபோலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X