சுனாமி: நாகை மக்களுக்கு அமிர்த்தானந்தமயி வழங்கிய வீடுகள்
நாகப்பட்டினம்:
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாகையில் மாதா அமிர்த்தானந்தமயி மடம் சார்பில் கட்டப்பட்ட 374 வீடுகளின்சாவிகளை மாதா அமிர்த்தானந்த மயி மாவட்டக் கலெக்டரிடம் வழங்கினார்.
மாதா அமிர்த்தானந்தமயி தனது மடத்தின் சார்பில் ரூ. 6.55 கோடி செலவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட செம்மன்தன்பட்டி,அக்கரைப்பட்டி, பண்டகசாலை அகிய கிராம மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்.மேலும் இந்த இடத்தில் உள்கட்டமைப்பு வசதிகளான சாலை, கழிவு நீர் கால்வாய்கள், சமுதாய கூடம், குழந்தைகள் காப்பகம்ஆகிய வசதிகளையும் செய்து தந்துள்ளார்.
இந்த கட்டிடங்களுக்கான சாவியை நேற்று நாகையில் நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெ. ராதாகிருஷ்ணனிடம் மாதாஅமிர்த்தானந்தமயி ஒப்படைத்தார். கிராம மக்களின் சார்பாக மாவட்ட கலெக்டர் அந்த சாவிகளை பெற்றுக் கொண்டார். மேலும்பாதிக்கப்பட்ட தமிழக மற்றும் கேரள மாநில மக்களுக்காக தாம் கட்டியுள்ள சுமார் 1,500 வீடுகளின் சாவிகளையும் கலெக்டரிடம்ஒப்படைத்தார்.
இது குறித்து அமிர்த்தானந்த மயி கூறும் போது எங்கள் மடம் சார்பில் நாகை மாவட்டத்தில் மட்டும் மேலும் 1,950 வீடுகள் கட்டித்தருவதற்கு திட்டம் வைத்துள்ளோம் என்றார்.
இதையடுத்து கலெக்டர் பேசுகையில், மாநில அரசு ரூ. 180 கோடி நிதி நாகை மாவட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம்அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 17,461 வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டி கொடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications