ஜெ: பிரதமரிடம் திமுக கூட்டணி எம்பிக்கள் புகார்
டெல்லி:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் கூட்ட நெரிசலில் 42 பேர் இறந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுகோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் மனு கொடுத்தனர்.
பிரதமரை தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி எம்.பிக்கள்,தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இன்று சந்தித்தனர்.அப்போது சென்னையில் 42 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். தமிழக அரசுமற்றும் காவல்துறையின் அஜாக்கிரதையான போக்கு காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது. எனவே காவல்துறைவிசாரணையும், நீதி விசாரணையும் முறையாக நடக்காது.
மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கிய நிவாரண நிதியை மாநில அரசு சரியாக வினியோகிக்கவில்லை. நிதியில் பலமுறைகேடுகள் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
எனவே நிதியை எப்படி செலவிடுவது என்பது குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்கி அதைபின்பற்ற மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு வழங்கினர்.












Click it and Unblock the Notifications