செளதி சிறைகளில் 2,548 இந்தியர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
செளதி அரேபியாவில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 2, 548 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசுதெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்தவர்கள் 1,444 பேர் செளதி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 1,104 பேர் இந்த ஆண்டில்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று செளதி அரேபிய அரசிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறுவுத்துறைஇணையமைச்சர் அகமது ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
மேலும் கேரள வாலிபர் அப்துல் லத்தீப் நெளஷத், செளதியில் அரேபியர் ஒருவரை தாக்கி அவரது கண்ணை குருடாக்கியதுதொடர்பாக, அவரது கண்ணை தோண்டி எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்யும் படி இந்திய அரசு செளதி அரசர் அப்துல்லா பின் அப்துலசிஸ் அல்சவூத்துக்கும் மற்றும் கவர்னருக்கும் மனு அனுப்பியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications