கிறிஸ்தவ சர்ச்சுகளில் அன்னதானம்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் 7 கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தினம் முதல் இலவச அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் எனமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளர்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சார்பில் திருக்கோவில் அன்னதானத் திட்டத்தின்மூலம் 180 கோவில்களில் அன்னதானத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதே போல, 12 இஸ்லாமிய தர்ஹாக்களில் வெள்ளிதோறும் இலவச அன்னதானத் திட்டம் அமலில் உள்ளது. தற்போதுஇத்திட்டத்தை விரிவுபடுத்தி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் அன்னதானத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இதன் படி மாநில சிறுபான்மை ஆணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மாநில சிறுபான்மை ஆணையத்தின் சார்பில்பதிவு பெற்ற அறக்கட்டளை இதற்காக தொடங்கப்படும். சிறுபான்மை ஆணைய தலைவரே, அறக்கட்டளைத் தலைவராகஇருப்பார்.
ஆணையத்தின் ஏனைய உறுப்பினர்கள், அறக்கட்டளையின் பிற நிர்வாகிகளாக செயல்படுவர். இந்த அறக்கட்டளைக்கு மூலநிதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 கோடி வழங்கப்படும்.
அறக்கட்டளைக்குத் தேவையான பிற நிதி நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும். இத்திட்டத்தை சென்னை அண்ணா நகர்சிஸ்வா பிரார்த்தனை தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்துமஸ் தினத்தன்று நான் தொடங்கி வைக்கிறேன்.
இதே நேரத்தில், கோவை போத்தனூர் பி.எஸ்.கிறிஸ்டோபர் தென்னிந்திய தேவாலயம், குனியத்தூர் சிஸ்வா தேவாலயம்,நாமக்கல் ரோமன் தேவாலயம், மதுரை ஆரப்பாளயம் புதுவாழ்வு திருச்சபை தேவாலயம், தேனி சங்கராபுரம் சிஸ்வாதேவாலயம், ஈரோடு மாணிக்கம்பாளையம் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் தொடங்கி வைக்கப்படுகிறது.
இத்திட்டம் படிப்படியாக மேலும் பல வழிபாட்டுத் தலங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications