நெஞ்சை கனக்க வைத்த கடலூர் மீனவர் குப்பங்கள்
கடலூர்:
சுனாமியால் இறந்தவர்களின் நினைவாக கடலூர் மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில்ஏராளமானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.
சுனாமி நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அமைதி ஊர்வலங்கள், கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி பேரலைகள் நடத்திய கோரத் தாண்டவத்தில், பல்லாயிரக்கணக்கானோர்உயிரிழந்தனர்.
சுனாமி தாக்குதலுக்கு ஆளான கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மெளன ஊர்வலங்கள், கண்ணீர்அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சுனாமிக்குப் பலியான மீனவர்களின் வீடுகள் முன்பு அவர்களது உருவப் படங்கள் வைக்கப்பட்டு அவற்றிற்கு மாலைகள்அணிவிக்கப்பட்டிருந்தன. பலர் அய்யர்களை வைத்து திதியும் கொடுத்தனர். மீனவர் குடியிருப்புகள் முழுவதும் கண்ணீரும்,கம்பலையுமாக காணப்படுகிறது.
கீச்சாங்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் ஏராளமானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதுவை அரசு சார்பில் பாண்டிச்சேரியில் இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.
ஜெ வெளியிட்ட நிவாரணப் பணி நூல்:
இதற்கிடையே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள்குறித்த விளக்க நூலை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப்பணிகளை விளக்கி வருவாய்த்துறை சார்பில் நூல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
டைடிங் ஓவர் சுனாமி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நூலை முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில்வெளியிட்டார். முதல் பிரதியை வருவாய்த்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் சுனாமியால் இடிந்து போன, கன்னியாகுமரி மாவட்டம் மேல மணல்குடி, கீழ மணல்குடி கிராமங்களைஇணைக்கும் பாலத்திற்குப் பதில் புதிய பாலத்தை கட்டுவதற்கான அடிக்கல்லையும் ஜெயலலிதா சென்னை கோட்டையில் திறந்துவைத்தார்.