புத்தாண்டு நிகழ்ச்சிகள்: ஹோட்டல்களுக்கு தடை
சென்னை:
புத்தாண்டு சிறப்பு இசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்த சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு, உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
காப்பி ரைட் வாங்காத பாடல்களை, இசை ஆல்பங்களை பொது மேடைகளில் பாடி சம்பாதிப்பது சட்டப்படி தண்டனைக்குரியகுற்றமாகும். ஆனால் பெரும்பாலும் இதனை யாரும் சட்டைப்படுத்துவதில்லை.இந்த நிலையில் நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டு தினத்தின்போது பெரிய அளவில் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துலட்க்கணக்கில் சம்பாதிப்பதை எதிர்த்து சென்னையில் உள்ள போனோகிராபிக் பெர்பாமன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள பிரசிடென்ட், எம்ஜிஎம் குரூப் ஆப் ஹோட்டல்ஸ், டி.சி.மேனர், ராதா பார்க், விஜயா பார்க் உள்ளிட்டஹோட்டல்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் தனது மனுவில், முறைப்படி உரிமம் பெறாமல் பாடல்களை ஒலிபரப்பும் இந்த ஹோட்டல்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தணிகாசலம் மேற்கண்ட இந்த ஹோட்டல்களில் புத்தாண்டுசிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடத்த இடைக்கால தடை விதித்தார்.
இது தொடர்பாக போனோகிராபிக் நிறுவன அதிகாரி கூறுகையில், சென்னையில் 100க்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்குநோட்டீஸ் அனுப்பியுள்ளோம். உரிமம் வாங்காத மற்ற ஹோட்டல்களிலும் புத்தாண்டு இசை நிகழ்ச்சியை நடத்த விரைவில் தடைவாங்குவோம் என்றார்.