For Daily Alerts
Just In
இ-மெயில்: பெங்களூர் விரைந்தது தனிப்படை
திருநெல்வேலி:
நாடாளுமன்றத்திற்கு இ-மெயில் மிரட்டல் விடுத்த குற்றவாளி பெங்களூரில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்துதனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து நெல்லையிலிருந்து இ-மெயில் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து தமிழக போலீஸாரும்,டெல்லியில் இருந்து வந்த ஐபி பிரிவினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இ-மெயில் அனுப்பிய குற்றவாளி மதுரை அல்லது கோவையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இருஊர்களுக்கும் தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன. இரு ஊர்களிலும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந் நிலையில், குற்றவாளி பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லிபோலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு பெங்களூருக்கு விரைந்துள்ளது.
இதற்கிடையே, நெல்லை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளைப் போலீஸார் தொடர்ந்து தீவிரமாககண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, மேலப்பாளையம், பத்தமடை ஆகிய பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.
Comments
Story first published: Monday, December 26, 2005, 5:30 [IST]