பக்தரிடம் வைர மோதிரம் அபேஸ்: வடபழனி கோவில் அர்ச்சகர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வடபழனி முருகன் கோயிலில் பக்தரின் வைர மோதிரத்தை திருடிய அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர்.

மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் பாலகிருஷ்ணன், தி.நகரில் வைர மோதிரம் வாங்கிக் கொண்டு வடபழனி கோயிலுக்குசென்றார். அங்கு மோதிரத்தை சாமியிடம் வைத்து அர்ச்சனை செய்து விட்டு, பிறகு கையில் அணிந்த கொள்ள முடிவு செய்தார்.

வைர மோதிரத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு அர்ச்சனை செய்து தரும்படி அங்கிருந்த கணபதி என்ற அர்ச்சகரிடம் கொடுத்தார்.அவர் அர்ச்சனை செய்து விட்டு பழத்தையும், பூவையும் தட்டில் வைத்து கொடுத்தார். பாலகிருஷ்ணன் கோயிலுக்கு வெளியேவந்து பார்த்த போது அர்ச்சனை தட்டில் மோதிர கவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வடபழனிகுற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகனிடம் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக 5 அர்ச்சகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அர்ச்சகர் கணபதி எஸ்கேப் ஆகியிருந்ததுதெரியவந்தது. இதனால் சின்மயா நகர் என்ஜிஓ காலனியில் இருக்கும் கணபதி வீட்டுக்கு போலீசார் விரைந்தனர்.

வீட்டில் இருந்த கணபதியிடம் விசாரித்த போலீசார் அவரிடம் இருந்த மோதிரத்தை பறிமுதல் செய்து, கைது செய்தனர். நான்குவைர கற்கள் பதிக்கப்பட்ட மோதிரத்தின் மதிப்பு ரூ.1.20 லட்சம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+