புத்தாண்டு கொண்டாடம்: ஹோட்டல் பார்களுக்கு போலீஸ் கடும் கட்டுப்பாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் கடிவாளம் போட்டுள்ளார்.
வருடத்துக்கு விடை கொடுக்கும் நாளான டிசம்பர் 31ம் தேதி இரவு வசதி படைத்தவர்கள் நட்சத்திர ஓட்டல்களில்ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்பார்கள். இவர்களின் வசதிக்காக ஓட்டல்கள்விதவிதமான ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.இந்நிலையில் போலீஸ் கமிஷனர் தலைமையில் நட்சத்திர ஓட்டல் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் புத்தாண்டுநிகழ்ச்சிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.
இரவு 11.45 வரை மட்டுமே பார் திறந்திருக்க வேண்டும். 12 வரை மட்டுமே டான்ஸ் ஆடலாம். புத்தாண்டு பிறந்த பிறகும்நிகழ்ச்சிகள் தொடரக் கூடாது, பாரை திறந்து வைத்து தண்ணீரை திறந்துவிட கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நடராஜ்எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications