For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் ரூ. 100 கோடியில் ஏழுமலையான் கோவில்
சென்னை:
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலைப் போன்றே சென்னையிலும் ரூ. 100 கோடி செலவில் கோவிலை கட்டும் பணிஅடுத்த ஆண்டு முதல் துவக்கும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இத் திட்டத்துக்காக சென்னையில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் கோரிக்கைவிடுத்திருந்தது. அக் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.இது குறித்து தேவஸ்தானத்தின் தகவல் மைய ஆலோசனைக் குழுத் தலைவர் அனந்தகுமார் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில்,
சென்னையில் கோவில் கட்டுவதற்காக 5 இடங்களில் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனால் அந்த இடங்கள் ஆகம விதிப்படியும்வாஸ்துப்படியும் சரியாக அமையாததால் வேறு இடத்தைப் பார்த்து வருகின்றோம் என்றார்.
இடம் தேர்வானவுடன் ரூ. 100 கோடி செலவில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியை அடுத்த ஆண்டு துவங்கி விடுவோம்என்றார்.
புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி கோவிலுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்என்றார்.
Comments
Story first published: Thursday, December 29, 2005, 5:30 [IST]