For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்க தோஷம்: பெண்களுக்கு நாமம்- போலிச் சாமி கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தங்க தோஷம் உள்ளதாக கூறி பல பெண்களிடம் நகைகளை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்ட போலிச் சாமியாரைசென்னை போலீஸார் இன்று கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரில் வசித்து வருபவர் மணி சர்மா. சாமியாராக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டஅவர், தங்க தோஷம் உள்ளதாக கூறி பல பெண்களை அணுகினார்.

அவர்களுக்கு தங்க தோஷம் நீங்க சிறப்புப் பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி தங்க நகைகளை வாங்கிச் செல்வார். ஆனால்அப்படியே தலைமறைவாகி விடுவார். இப்படி ஏராளமான பெண்களிடம் அவர் நகைகளை மோசடி செய்துள்ளார்.

இவரிடம் தங்க தோஷ நிவர்த்திக்காக நகைகளைத் தந்து ஏமாந்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த டாக்டர் நிஷா, செளந்தரராஜன்ஆகியோர் சென்னை போலீஸில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து தலைமறைவாகி விட்ட மணி சர்மாவை போலீஸார் தேடி வந்தனர். இந் நிலையில் இன்று மணி சர்மா பிடிபட்டார்.

அவரது வீட்டில் சோதனை நடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 95 பவுன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X