For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக தலைவராக பொறுப்பேற்றார் ராஜ்நாத்: இது பதவியல்ல, பரீட்சை-வாஜ்பாய் அட்வைஸ்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாஜக தலைவர் பதவியில் இருந்து அத்வானி விலகியதை தொடர்ந்து முன்னாள் உபி முதலமைச்சர் ராஜ்நாத் சிங் புதிய தலைவராகஇன்று பொறுப்பேற்றார்.

பாஜக புதிய தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் பாஜக தலைவர் பொறுப்பை வழங்கி அத்வானி கூறுகையில், தலைவர் ராஜ்நாத் சிங்தலைமையில் பாஜக பெரும் முன்னேற்றம் காணும், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

ராஜ்நாத் சிங்கை கட்சியின் மூத்த தலைவர் வாஜ்பாயி, ஜஸ்வந்த் சிங், பிரமோத் மகஜன், வெங்கைய்யா நாயுடு ஆகியோரும்வாழ்த்தினர்.

வாழ்த்தி பேசிய வாஜ்பாய், புத்தாண்டு தினத்தில் இருந்து ராஜ்நாத் புதிய சவால்களை சந்திக்கவுள்ளார்.

உபி முதலமைச்சராக ஏற்கனவே பொறுப்பு வகித்து மகத்தான தலைவர் என்று தம்மை நிரூபித்துள்ளார் சிங். இருந்தாலும் பாஜகதலைவர் பதவி என்பது சுலபமான பதவியல்ல. முள் கீரிடத்தை சூட்டிக்கொண்டதை போலவும், முள் மெத்தை மீது படுத்திருப்பதுபோலாகும். பாஜகவின் கொள்கையில் உறுதியாக இருந்து திறம்பட செயல்பட வேண்டிய பொறுப்பு இந்த பதவிக்கு உள்ளது.

அத்வானி இந்த பதவியை வகித்தபோது எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் கட்சியின் கொள்கையை விட்டுத் தராமலும், அதேசமயத்தில் கட்சி உறுப்பினர்கள் மனம் கோணாமலும் நடந்து கொண்டார். எனவே அத்வானியின் ஆலோசனைகள் சிங்குக்கும்உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

இதையடுத்து தலைவர் பொறுப்பை ஏற்ற ராஜ்நாத் சிங் கூறுகையில், தலைவர் வாஜ்பாய் சொன்னது போல், இது பதவி அல்ல.பொறுப்பு, இது கெளரவம் இல்ல, எனக்கு தரப்பட்டுள்ள பரீட்சை.

நான் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் ஆகியோரின் வழிகாட்டுதலின்படிகட்சி எனக்கு வைத்துள்ள பரீட்சையில் தேர்ச்சி அடைவேன் என்ற கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X