For Quick Alerts
For Daily Alerts
Just In
ஏ.சி.சண்முகம் பூந்தமல்லி கோர்ட்டில் சரண்
சென்னை:
சென்னை கூவம் ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.சி.சண்முகம்பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஏ.சி. சண்முகத்தின் மீது கூவம் ஆற்றில் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியது மற்றும் மாணவனை தாக்கிய வழக்குகள் ஆகியவைபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தலைமறைவாகியிருந்த இவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில்சரணடைந்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி தினமும் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனைவிதித்துள்ளார்.
Comments
Story first published: Wednesday, January 4, 2006, 5:30 [IST]