இங்கிலாந்தில் சீக்கியர்கள் கார்கள் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இங்கிலாந்தின் எடின்பர்க் நகரில் சீக்கிய, முஸ்லீம்களின் கார்களை நிற-இன வெறியினர் தாக்கி வருகின்றனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 சீக்கியர்கள், முஸ்லீம்களின் கார்களின் டயர்கள் கிழிக்கப்பட்டன. கண்ணாடிகள்உடைக்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்தில் எடின்பர்க் அருகே உள்ள மில் லேன் குருத்வாரா அருகே நிறுத்தப்பட்டிருந்த சீக்கியர்களின்கார்கள் இந்த வெறியர்களுக்கு இலக்காயின.
இந்தத் தாக்குதல் மேலும் மோசமாகலாம், இதனால் இன-நிற வெறி மோதல்கள் உருவாகலாம் என்று கருதும் சிறுபான்மையினரானசீக்கிய, முஸ்லீம்களின் சமூகத் தலைவர்கள் காவல்துறையின் உதவியை நாடி வருகின்றனர்.
இது நிற வெறித் தாக்குதல் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என லோதியன் அன்ட் பார்டர் போலீஸ் தலைவரான லிஸ்ரெனால்ட் கூறியுள்ளார். நிற வெறியர்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications