For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கக் கடலில் மீண்டும் புயல் சின்னம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வங்கக் கடலில் சென்னையிலிருந்து மிக நீண்ட தூரத்தில், புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதத் தொடக்கம் வரை பெய்து தீர்த்த வட கிழக்குப் பருவ மழை மற்றும் 9புயல் சின்னங்கள் காரணமாக தமிழகமே வெள்ளக்காடாகி சின்னா பின்னமாகிப் போனது.

கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து தமிழகம் ழுவதும் பனி மற்றும் கடும் குளிரில் நடுங்கி வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையிலிருந்து மிக நீண்ட தொலைவில் இருப்பதாகவும், இது வலுவடைந்தால்மட்டுமே அது எவ்வளவு தூரத்தில் உள்ளது, எந்தத் திசையில் நகரத் தொடங்கியுள்ளது என்பதை உறுதியாகத் தெரிவிக்கமுடியும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் விளக்கியுள்ளது.

வட கிழக்குப் பருவ மழைக் காலம் தமிழகத்தில் இன்னும் முடியவில்லை என்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும்எனவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில்சனிக்கிழமை இரவு லேசான மழை பெய்தது.

இதே போல கடலூர், நாகப்பட்டனம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசான மழை பெய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X