சென்னையை மூடிய போகி புகை!
சென்னை :
சென்னை நகரில் போகிப் பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீ வைத்துக் கொளுத்தியதால் நகர் முழுவதும் பெரும்புகை மூட்டமாகக் காணப்பட்டது.
பொங்கலுக்கு முந்தைய விழாவான போகிப் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் போகிப் பண்டிகைவழக்கமான உற்சாகத்துடன் இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது.அதிகாலை 4 மணி முதலே போகி கொளுத்த ஆரம்பித்து விட்டனர். வீட்டில் உள்ள பழைய பொருட்கள், அட்டைப் பெட்டிகள்,பாய்கள், தலையணைகள் உள்ளிட்ட பல பொருட்களை வீட்டுக்கு முன்பு குவித்து அதைத் தீவைத்துக் கொளுத்தி போகியைக்கொண்டாடினர்.
சிறுவர்கள் கையில் சிறிய மேளத்துடன் தாளமிட்டபடி போகியை சுற்றி வந்து மகிழ்ச்சி அடைந்தனர். போகிப் புகை கிளம்பியதால்சென்னை நகர் முழுவதும் புகை மண்டலமாக மாறி விட்டது. ஏற்கனவே காலை நேரத்தில் கடுமையான பனி கொட்டிக்கொண்டிருப்பதால், மூடுபனியுடன், போகி புகையும் சேர்ந்து சென்னை நகரமே வெண்புகை மண்டலமாக காணப்பட்டது.
டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது என்று போலீஸார் எச்சரித்திருப்பதால் பெரும்பாலான மக்கள் அவற்றைதவிர்த்தனர். ஆனாலும் சிலர் சந்தில் சிந்து பாடிவிட்டனர். இதனால் சில இடங்களில் டயர்கள் துர் நாற்றத்துடன் எரிந்துஎரிச்சலை ஏற்படுத்தின.












Click it and Unblock the Notifications