7 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை:
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நில நிர்வாகத்துறை ஆணையராக பணியாற்றி வந்த எஸ்.ஆதிசேஷையா, வருவாய்த் துறைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலராக இருந்து வந்த சந்திர மவுலி, சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். இவர் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடுசெய்வதில் அரசுக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நில ஒதுக்கீடு செய்வதில் அரசிடம் சில சட்டச் சிக்கல்களை சுட்டிக் காட்டிய இவர் விடுமுறையில் போய்விட்டார். இந் நிலையில்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வந்த ராஜீவ் நயன் செளபே, அதன் சிறப்பு அதிகாரி மற்றும்நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
தொழில்துறை அரசு செயலாளராக உள்ள ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலராகவும், தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ்கார்ப்பரேசன் தலைவராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
தர்மபுரி முன்னாள் கலெக்டர் சுதீப் ஜெயின், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில தேர்தல் ஆணையச் செயலாளராகப் பணியாற்றி வந்த காசி விஸ்வநாதன் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சேலம் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சேவை தொழிற் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றிவந்த அசோக் வர்தன் ஷெட்டி ஊனமுற்றோர் நல்வாழ்வுத்துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications