மத்திய அரசு ஊழியர்கள் மார்ச் 1 முதல் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்ஈடுபட உள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்கள் 6 வது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும், இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்க வேண்டும்,தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைக்கக் கூடாது.புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பனபோன்ற 17 அம்ச கோரிக்கைகளை தெரிவித்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை நீண்ட காலமாகவற்புறுத்தி வருகிறார்கள்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வரும் மார்ச் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகமத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications