இந்திய ராணுவ உதவி தேவையில்லை: இலங்கை அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தற்போதைய சூழ்நிலையில் இந்தியா தார்மீக ஆதரவு மட்டும் அளித்தால் போதும். ராணுவ ரீதியிலான உதவி உள்ளிட்ட வேறுஎந்த உதவியும் இலங்கைக்கு இப்போது தேவையில்லை என்று அந்நாட்டு அரசியல் விவகாரத்துறை அமைச்சர் குணசேகராகூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவின் தார்மீக ஆதரவை மட்டுமே இலங்கை தற்போதுஎதிர்நோக்கியுள்ளது. இலங்கை இனப் பிரச்சினை தீர இந்தியா தனது தார்மீக ஆதரவை முழுமையாக அளிக்க வேண்டும்.

ராணுவ உதவி உள்ளிட்ட வேறு உதவிகளை நாங்கள் எதிர்நோக்கியிருக்கவில்லை. தற்போது இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் மற்றும் நார்வே தூதுக்குழு ஆகியோருக்கிடையே நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில், நார்வே நாட்டுக்குப்பதில் இந்தியாவை சேர்க்கவும் நாங்கள் விரும்பவில்லை.

அரசியல் ரீதியாக சுமூகத் தீர்வு ஏற்படுவதற்கு இந்தியா முழு அளவில் உதவ வேண்டும். இலங்கை பிளவுபடக் கூடாது என்றஎண்ணம் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டால் போதும்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கு வந்தது, நல்லெண்ண பயணம் தான். ராணுவ உதவி கோரி அவர் வரவில்லை. அதேபோல, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்திக்காமல் தவிர்த்ததற்கும் விசேஷ காரணம் எதுவும் இல்லை.

முதல்வரை சந்திக்க அதிபர் ராஜபக்ஷே மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால் நேரமின்மை காரணமாக அவரால் சென்னைக்குவர முடியவில்லை. மேலும், இங்குள்ள அரசியல் சூழ்நிலைகளும் அதற்கு ஒரு காரணம் என்று கூறலாம் என்றார் குணசேகரா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+