டிவி: கருணாநிதி மீது டி.ராஜேந்தர் கடும் தாக்கு
சென்னை:
சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்சிவி) மற்றும் ஹாத்வே கேபிள் இணைப்பு நிறுவனங்களை அரசே கையகப்படுத்தும்முடிவுக்கு திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட எம்.எஸ்.ஓக்கள் எனப்படும் பன்முக கேபிள் சேவை நிறுவனங்கள் இருந்தாலும் இவற்றில்முக்கியமான இரண்டு நிறுவனங்களான சுமங்கலி கேபிள் விஷன் மற்றும் ஹாத்வே ஆகியவை தான்.நம் வீடுகளுக்கு இணைப்பு தரும் கேபிள் டிவிக்காரர்கள் சுமங்கலி கேபிள் விஷன் அல்லது ஹாத்வேயிடம் இருந்து தான் டிவிஅலைவரிசைகளை டவுன்லோட் செய்து தருகின்றனர். மிகச் சில கேபிள் டிவிக்காரர்களே சொந்தமாக டிஷ் வைத்து எல்லாடிவிக்களின் அலைவரிசையையும் டெளன்லோட் செய்து வீடுகளுக்குத் தருகின்றனர்.
இதில் சுமங்கலி கேபிள் விஷன் தமிழகத்தில் 80 சதவீத வீடுகளுக்கு கேபிள் டிவி இணைப்புகளை வழங்கியுள்ளது. ஹாத்வே சுமார்10 சதவீதமும் மற்றவை எல்லாம் இணைந்தே மீதி 10 சதவீத வீடுகளுக்கும் கேபிள் டிவி இணைப்பைத் தந்துள்ளன.
இந் நிலையில் சன் டிவியை முடக்கும் நோக்கத்தில் எஸ்சிவி மற்றும் பெயருக்கு ஹாத்வே கேபிள் நிறுவனம் இரண்டையும்கையகப்படுத்த அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர் கருணாநிதி ஆளுனரை அவசரமாகச் சந்தித்து தமிழக அரசின்சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், திரையுலகினர் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இயக்குனர் பாரதிராஜா கருத்துதெரிவிக்கையில், பூனைக்கு யார் மணி கட்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது தமிழக அரசு மணியைக்கட்டி நடவடிக்கையை ஆரம்பித்து வைத்துள்ளது.
எங்களது தமிழ்த் திரை உள்ளிட்ட பல கேபிள் சேனல்கள் காணாமல் போனதற்கும், மக்களிடையே அவை மறைக்கப்பட்டதற்கும்எஸ்.சி.வியும், ஹாத்வே நிறுவனமும்தான் முக்கியக் காரணம்.
தமிழக அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தை விட எஸ்.சி.வி. நிறுவனத்துக்கு மிக அதிக அளவில் வருமானம் கிடைத்து வந்தது.கேபிள் டிவி பார்ப்போர், திரையுலகினருக்கு நன்மை பயக்கும் விதமான இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன் என்றார்பாரதிராஜா.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் அழகப்பன் (இவர் திமுகவைச் சேர்ந்தவர்) கூறுகையில், இந்தசட்டத்தால் பல புதிய சேனல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் புதிய திரைப்படங்களை வாங்குவதற்கு பல சேனல்கள்கிடைக்கும். நல்ல போட்டி இருக்கும், எங்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.
இதனால் தயாரிப்பாளர்களுக்கு இந்தச் சட்டம் பெரிய அளவில் உதவியாக இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும்அதிகரிக்கும். இந்த சட்டத்தை நான் வரவேற்கிறேன் என்றார்.
இயக்குனர் விஜய டி.ராஜேந்தர் விரலை சொடுக்கி, சொடுக்கி, தலையை கோதியபடி, மண்டையை அங்கிட்டும் இங்கிட்டுமாகஆட்டியபடி கூறியதாவது:
மழை, வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கக் கோரி ஆளுனரை சந்திக்க கருணாநிதிக்கு நேரம் இல்லை, நேரில் போகமுடியவில்லை. ஆனால் தனது குடும்பத்திற்கு பெரும் வருவாயை ஈட்டிக் கொடுக்கும் எஸ்.சி.வி. நிறுவனத்திற்குப் பிரச்சினைஎன்றவுடன் பேரனுடன் ஓடோடிச் சென்று ஆளுநரை சந்திக்கிறார். இது கேவலமாக இல்லையா? தமிழக அரசின் இந்த சட்டம்மிகவும் அருமையான ஒன்று என்றார்.
இயக்குனர் கேயார் கூறுகையில், அரசின் இந்தத் திட்டத்தால் டென் ஸ்போர்ட்ஸ், நேஷனல் ஜியோகிராபி, ஈ.எஸ்.பி.என் உள்ளிட்டபல கட்டணச் சேனல்களை மிகவும் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பார்க்க முடியும். தற்போது எஸ்.சி.வி. நிறுவனம் இந்தசானல்களை வழங்குவதில்லை. ஆனால் ஹாத்வே நிறுவனம் இவற்றை வழங்கி வருகிறது என்றார்.
தமிழகத்தின் பெரும் பகுதி மக்களுக்கு எஸ்.சி.வி. தான் கேபிள் சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. இதன் காரணமாக, புதிதாகவெளியாகும் திரைப்படங்களை பெரும்பாலும் சன் டிவிதான் வாங்கி வருகிறது.
பல்வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாக சன் டிவிக்கே தங்களது படங்களை விற்க தயாரிப்பாளர்களும், நடிகர்கள் முன் வருகிறார்கள்என்பது குறிப்பிடத்தக்கதது.












Click it and Unblock the Notifications